Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்ஜிஆர்-ஜெயலலிதா எனது ரோல்மாடல்! -தொகுப்பாளர் இளவேனில்

31 மார், 2017 - 09:45 IST
எழுத்தின் அளவு:
MGR-and-jayalalitha-are-my-role-model-says-jayatv-anchour-izhavenil

ஜெயா மேக்ஸ் டிவியில் தினமும் காலையில் இனிய வாழ்த்துக்கள், அடுத்து துள்ளுவதோ இளமை இரண்டு லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் இளவேனில். அதுதவிர பொங்கல், தீபாவளி போன்ற நாட்களில் ஜெயா டிவியில் இடம்பெறும் பேட்டிகள் மற்றும் தேர்தல் சம்பந்த மான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், எம்ஜிஆர்-ஜெயலலிதா ஆகிய இருவரும்தான் எனது ரோல் மாடல் என்கிறார்.


தினமலர் இணையதளத்திற்கு இளவேனில் அளித்த பேட்டி...


நான் முதலில் ஜெயா டிவியில் சபாஷ் மீரா என்ற தொடரில் கோவை சரளா மேடத்துடன் நடித்தேன். அதன்பிறகு ராஜ் மியூசிக் சேனலில் ஓல்டு இஸ் கோல்டு என்ற பழைய காலத்து பாடல்களை நேரடியாக ஒளிபரப்பு செய்து பேசும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இப்போது, ஜெயா மேக்ஸ் டிவியில் 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இனிய வாழ்த்துக்கள், 9 மணிக்கு ஒளிபரப்பாகும் துள்ளுவதோ இளமை ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறேன். இனிய வாழ்த்துக்களில் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களும், துள்ளுவதோ இளமையில் மெசேஜூம் சொல்கிறேன்.


என்னதான் கம்ப்யூட்டர் காலத்தில் இருந்தாலும் பார்ஸ்ட்புட் பக்கம் திரும்பியுள்ள மக்கள், இயற்கை உணவுகளை மறந்து விட்டார்கள். அதனால் என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் உடம்பு ஆரோக்யமாக இருக்கும் என்பதை சொல்வது போன்று ஒரு ஷோ இருக்கும். அதுக்கு அப்புறம் சாலை விதிமுறைகளை எப்படியெல்லாம் நாம் பின்பற்ற வேண் டும். எதற்காக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு விழிப்புணர்வு சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பம் சமே ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவதுதான்.


இந்த நிகழ்ச்சிக்காக புத்தகங்களில் இருந்து வழக்கத்தில் இல்லாத தமிழ் வார்த்தைகளை சேகரித்து பேசுகிறேன். ஐஸ்கிரீம் என்றால் பனிக்கூழ், கேஸ் என்பதை சமையல் எரிவாயு, பெண்டிரைவ் என்பதை ஆவண கடத்தி, கேசட் என்பதை ஒலிநாடா என தூய தமிழில் பேசுகிறேன். ஆங்கிலம் பேசலாம். ஆனால் தாய்மொழியான தமிழை உயிர் மாதிரி பாது காக்கனும். அதனால், தமிழில் பேசுவது மட்டுமின்றி, ஒரு கவிதை சொல் லித்தான் நிகழ்ச்சியை முடிப்பேன். இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படிச்சவங்க மட்டுமின்றி பாமர மக்களையும் போய் சேர்ந்துள் ளது. வயதானவர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளது. தமிழில் பேசுவதை அனைவருமே விரும்புகிறார்கள். அதனால் இந்த நிகழ்ச்சி மனதளவில் திருப்தியாக உள்ளது.


நானே கவிதை எழுதி பேசுவேன். சில சமயங்களில் புத்தகங்களில் உள்ள நல்ல கவிதைகளையும் பயன்படுத்துவேன். முக்கியமான நான் கவிதை சொல்லி முடிப்பதைத்தான அனைவரும் விரும்புகிறார்கள். ஒருநாள் விட்டால்கூட அடுத்த நாள், ஏன் கவிதை சொல்லவில்லை என்று நேயர்கள் கேட்கிறார்கள்.


எனக்கு இந்த அளவுக்கு தமிழில் ஆர்வம் ஏற்பட காரணம் என் தந்தை சபாபதிதான். அவருக்கு தமிழ் பற்று அதிகம். எனக்கு பெயர் வைத்தது புரட்சிதலைவர் எம்ஜிஆர். விவசாய குடும்பத்தில் பிறந்தவன் என்று சொல்வதை பெருமைப்படுகிறேன். நானும் 4 வருடம் விவசாயம் செய்திருக்கிறேன். என் பெயர் இளவேனில், அண்ணன் பெயர் இளம்பிறை, அக்கா பெயர் கனிமொழி, தங்கை பெயர் கார்முகில் என எங்கள் வீட்டில் அனை வருக்கும் தமிழ் பெயர்கள்தான்.


மேலும், எனது அடுத்த இலக்கு அரசியல். அரசியலில் ஒரு பேச்சாளராக வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே அரசியலில் ஈடுபாடாக இருந்து வருகிறேன். என்னைப்பொறுத்தவரைக்கும் அரசியல் என்பது புனிதமான ஒன்று. அடுத்தவங்க ளுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். எனக்கு அரசியல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் ரோல்மாடல்கள். எனக்கு எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் முகத்தை பார்க்கும்போது என் கஷ்டமெல்லாம் காணாமல் போய் விடும். அவர்கள் படாத கஷ்டமா என்று தோன்றும். எதிர்காலத்தில் அவர்களை முன்மாதிரியாக கொண்டுதான் அரசியலுக்கு வருவேன். மிக விரைவில் நான் அரசியலில் வந்து விடுவேன்.


அதேபோல் சினிமா, சின்னத்திரை ஈடுபாடும் உள்ளது. ஆனால் முதலில் அரசியல்தான். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில் அரசியலில் ஈடுபடுவேன். இதுதான் எனது வாழ்வின் லட்சியம் என்கிறார் தொகுப்பாளர் இளவேனில்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in