சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
2017ம் ஆண்டு ஆரம்பமானதிலிருந்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியான படங்களை விட மார்ச் மாதம் வெளியான படங்களின் எண்ணிக்கை அதிகம். ஜனவரி மாதத்தில் 8 படங்களும், பிப்ரவரி மாதத்தில் 11 படங்களும் வெளியாகின. மார்ச் மாதம் முழு ஆண்டுத் தேர்வு மாதம் என்பதால் இந்த மாதத்தில் குறைவான படங்களே வெளியாகும் என்றார்கள். ஆனால், மார்ச் 3ம் தேதி 3 படங்களும், 10ம் தேதி 2 படங்களும், 17ம் தேதி 5 படங்களும், மார்ச் 24ம் தேதி 8 படங்களும் வெளியாகின. நாளை மார்ச் 31ம் தேதி 6 படங்கள் வெளியாக உள்ளன. மொத்தமாக மார்ச் மாதப் படங்களின் எண்ணிக்கை 24 படங்களாக இருக்கும். இது ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் வெளியான படங்களை விடவும் அதிகம்.
நாளை மார்ச் 31ம் தேதி, “அட்டு, அரசகுலம், செவிலி, நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல, டோரா, கவண்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'கவண், டோரா' ஆகிய படங்களுக்கு இடையேதான் உண்மையான போட்டி. மீதிப்படங்கள் புதியவர்களின் படங்கள்தான். இந்தப் படங்களுக்கு முதல் காட்சியிலேயே ரசிகர்கள் வந்தால் அதுவே பெரிய விஷயம்.
'டோரா' படத்தில் நயன்தாரா தான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பேய்ப் படம் என்பதால் நயன்தாராவின் முந்தைய 'மாயா' பட ராசி இந்தப் படத்திற்கும் அமைந்தால் வெற்றிப் படமாக அமையலாம்.
விஜய் சேதுபதி, டிஆர் மற்றும் பலர் நடித்துள்ள 'கவண்' படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு என்று எதுவும் ஏற்படவில்லை. 'கோ' படத்தில் பத்திரிகையை மையமாக வைத்து படமாக்கியிருந்த கே.வி.ஆனந்த், 'கவண்' படத்தில் தொலைக்காட்சியை மையமாக வைத்திருக்கிறார். 'கோ' படத்திற்குப் பிறகு ஆனந்துக்கும் வெற்றி எட்டாக்கனியாகவே இருக்கிறது.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்புகளுக்கு பரீட்சை முடிவடைந்துவிடும். அதன் பின் மற்ற வகுப்புகளுக்கு திங்கள் முதல் ஆரம்பமாகும். இந்த சூழ்நிலையில் நாளை வெளியாகும் படங்களைப் பார்க்க குடும்பத்து ரசிகர்கள் வருவதைப் பொறுத்தே இந்தப் படங்களின் வெற்றி அமையும் என்பதுதான் உண்மை.