ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
சமுத்திரகனி இயக்கிய அப்பா படம் தற்போது மலையாளத்தில் ஆகாஷ மிட்டாயி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதனை மகா சுபைர் என்பவர் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக வரலட்சுமி நடிப்பதாக இருந்தது. கொச்சியில் நடந்த பட பூஜையிலும் அவர் கலந்து கொண்டார். ஆனால் திடீரென படத்திலிருந்து விலகிய அவர் "ஆணாதிக்கமும், நல்ல பண்பும் இல்லாத தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்ற முடியாது" என்று கூறினார். இடையில் என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.
இந்த நிலையில் நேற்று படத்தின் தயாரிப்பாளரும், அவரது உதவியாளரும் 10 கொண்ட கும்பலால் தாக்கப்பட்டுள்ளார். கொச்சியை சுற்றி படப்பிடிப்பு நடப்பதால் அங்குள்ள ஒரு ஓட்டலில் படப்பிடிப்பு குழுவினர் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தயாரிப்பாளர் மகா சுபைர், அவரது உதவியாளர் பாதுஷா ஆகியோர் ஓட்டல் ரெஸ்ட்டாரெண்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நுழைந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் தயாரிப்பாளரையும், அவரது உதவியாளரையும் கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. உடனடியாக இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கொச்சி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது தாக்குதல் நடத்தியது கொச்சி சம்பனம் பகுதியைச் சேர்ந்த அனீஷ் தலைமையிலான ரவுடி கும்பல் என்ற தெரியவந்தது. அந்த கும்பலை வலை வீசி தேடி வருகிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டால்தான் தாக்குதலுக்கான காரணம் தெரிய வரும்.