ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கத்தி' படத்திற்குப் பிறகு ஹிந்தியில் 'அகிரா' என்ற படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். அகிரா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தற்போது மகேஷ்பாபு நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார். தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இப்படத்தை முடித்த பிறகு மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். 'கத்தி' படத்தை தயாரித்த லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமே இந்த புதிய படத்தையும் தயாரிக்க உள்ளது. தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் அவருடைய உதவியாளர்கள் மும்முரமாக உள்ளனர்.
மகேஷ்பாபு படத்தின் வேலைகள் முடிவடைந்த பின்னர் விஜய் படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் முதல் துவங்க வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம் முருகதாஸ். துப்பாக்கி, கத்தி படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்த புதியபடம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு 25 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தகவல்.