ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சவுகார்பேட்டை படத்தை இயக்கிய வி.சி.வடிவுடையான் அடுத்து இயக்கும் படம் பொட்டு. இதில் பரத், சிருஷ்டி டாங்கே, இனியா, நமீதா நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இது மருத்துவக் கல்லூரியை மையமாக கொண்ட ஹாரர் திகில் படம். இடஒதுக்கீடு மூலம் மலைவாழ் மாணவி ஒருவருக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் சீட் கிடைக்கிறது. ஆனால் அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து விரட்டிவிட்டு அந்த இடத்தை நல்ல விலைக்கு விற்க நினைக்கிறது கல்லூரி நிர்வாகம். இந்த டார்ச்சரில் தற்கொலை செய்து கொள்ளும் அந்த மலைவாழ் மாணவி அதே கல்லூரியில் படிக்க வரும் பரத் உடலுக்குள் புகுந்து தன்னை தற்கொலை செய்ய வைத்தவர்களை பழிவாங்குகிற கதையாம்.
இந்தப் படத்தை தெலுங்கில் பொட்டூ என்ற பெயரிலும் இந்தியில் பிந்தி என்ற பெயரிலும் உருவாக்கி வருகிறார்கள். 90 நாட்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. தற்போது 3 மொழிகளில் டப் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. நமீதா பெண் அகோரி வேடத்திலும், இனியாக மலைவாழ் பெண் கேரக்டரிலும் நடித்திருக்கிறார்கள். பொட்டு மூலம் பரத் மீண்டும் பாலிவுட்டுக்குள் நுழைகிறார். ஏற்கனவே அவர் ஜாக்பாட் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.