'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டடம் கட்டும் முயற்சியை நாசர் தலைமையிலான புதிய நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. சுமார் 26 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த கட்டடம் 4 மாடி கொண்டதாகும். இதில் ஆயிரம் பேர் அமரும் அரங்கம், பிரிவியூ தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடன கூடம். எடிட்டிங், டப்பிங், மியூசிக் தியேட்டர்கள். மற்றும் அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது.
இதற்கான வரைபடம் தயாரித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதிக்கு அனுப்பப்பட்டது. தற்போது அதற்கு அனுமதி கிடைத்து விட்டது. இதைத் தொடர்ந்து நேற்று நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடியது. பொதுச் செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன் தலைமையில் நடந்த இந்த செயற்குழுவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி வருகிற 31ந் தேதி சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்துவது. விழாவுக்கு கமல், ரஜினியை அழைத்து முதல் செங்கலை எடுத்து தர வைப்பது. விழாவிற்கு அனைத்து சங்க நிர்வாகிகளை அழைப்பது, உள்ளிட்ட சங்கம் கட்டடம் தொடர்பான பல தீர்மானங்கள் தீர்மானக்கப்பட்டன.