ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர்கள் படம் இயக்குவது, இசையமைப்பது, பாடல் எழுதுவது என பலமுகம் காட்டி வருவது போன்று, இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என பலரும் ஹீரோவாகிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஹீரோக்களாக நடித்து வரும் நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் படம் இய்ககி வருகிறார். அவரைத் தொடர்ந்து இசையமைப்பாளர் பரணியும் ஒண்டிக்கட்ட என்ற படத்தை இயக்கியுள்ளார்.
தான் இயக்குனரானதுபற்றி பரணி கூறுகையில், நான் பெரியண்ணா, பார்வை ஒன்றே போதுமே, சுந்தரா டிராவல்ஸ், சார்லி சாப்ளின் உள்பட இதுவரை 40 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆரம்பத்தில் நான் இசையமைத்த படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி வந்தன. ஆனால் பின்னர் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு காரணம் எனக்கு எனக்கு போதுமான சுதந்திரம் என்பது கிடைக்கவில்லை. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. நாம் மட்டும் வேலையை ஒழுங்காக செய்தால் போதாது. யாராவது ஒருத்தர் தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றாலும் அது படத்தின் வெற்றியை பாதிக்கும்.
மேலும், சுற்றுலா படத்திற்கு பிறகு கடந்த சில ஆண்டுகளாக நான் இசை யமைக்கவில்லை. இப்போது ஒண்டிக்கட்ட என்ற படத்தை இயக்கி இசை யமைத்துள்ளேன். பிரண்ட்ஸ் சினி மீடியா சார்பில் என்னுடன் எனது நண்பரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் என்னை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் படமாக இது இருக்கும். பரணியால் இயக்குனராகவும் சாதிக்க முடியும் என்பதை இந்த படம் நிரூபிக்கும்.
முக்கியமாக, உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், முதல் மரியாதை, அழகி, பருத்திவீரன் படங்கள் வரிசையில் இந்த ஒண்டிக்கட்ட படமும் இடம்பிடிக்கும். நான் இசையமைப்பாளராக மட்டுமின்றி, எஸ்.ஏ.சந்திரசேகரனின் படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். அந்த அனுபவத்தில்தான் இந்த படத்தை இயக்கியுள்ளேன். விக்ரம் ஜெகதீஷ், நேகா, சிங்கம்புலி, கலைவாணி,சென்ட்ராயன், லொள்ளுசபா சாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் தாழ்வு மனப்பான்மை உள்ள ஒருவனின் காதல் பற்றிய கதை. மிரட்டலான படமல்ல, உணர்வுப்பூர்வமான படம். படத்தின் க்ளைமாக்ஸைப் பார்த்து பின்னணி இசையமைக்கும்போது நானே அழுதுவிட்டேன். கரகாட்டக்காரன் 2 வருடம் ஓடியது. நம் மண்ணோடு கலந்த கதை. அதை மக்கள் கொண்டாடினார்கள். அந்த வரிசையில் நம் கலாச்சாரத்தோடு கலந்து இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். அதனால் தமிழ்மக்கள் இந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று கூறும் பரணி, ஒண்டிக்கட்ட படம் கோடைவிடுமுறையில் ரசிகர்களை சந்திக்க வருவதாக சொல்கிறார்.