ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளையராஜா - எஸ்பிபி சர்ச்சை ஆரம்பமாகி ஒரு வார காலத்திற்கு மேலாகியும் இன்னும் ஓயாமல் பின்னணியில் புகைந்து கொண்டிருக்கிறது என்றே திரையுலகில் தெரிவிக்கிறார்கள். இருவரது நட்பையும் மனதில் கொண்டு இசை உலகத்தைச் சேர்ந்த பலர் அவர்களிருவருக்கும் இடையே சமாதான முயற்சியை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வாரம் தன்னுடைய அமெரிக்க நிகழ்ச்சிகளில் இளையராஜா பாடல்களைப் பாடப் போவதில்லை என முகப்புத்தகத்தில் பதிவிட்டதற்கப் பிறகு இருவருக்கும் இடையேயான விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அதன் பின் எஸ்பிபி முகப்புத்தகத்தில் எந்தப் பதிவையும் போடவில்லை. இளையராஜாவும் அவருடைய வழக்கறிஞர் மூலமாகவே தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்தார்.
தற்போது பாடல்களுக்கான ராயல்டி, காப்புரிமை விவகாரம் பலருக்கும் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜாவிற்கு ஆதரவாக பலர் கருத்துத் தெரிவித்தாலும், அதை அவர் இத்தனை வருட கால நட்புக்காகவாவது நட்பு ரீதியாக மென்மையாக அணுகியிருக்கலாம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தார்கள். அதே சமயம், எஸ்பிபி, முகப்புத்தகத்தில் அதை பதிவிட்டதற்குப் பதிலாக இளையராஜாவிடமே நேரடியாகப் பேசியிருக்கலாமே என்றும் சிலர் சொன்னார்கள்.
2015ம் ஆண்டு இளையராஜா தன் பாடல்களுக்கான காப்புரிமை, ராயல்டி பற்றி அறிவித்த நாளிலிருந்தே பெரும்பாலான எஃப்எம் வானொலி நிலையங்கள் அவருடைய பாடல்களை ஒலிபரப்புவதில்லை. தயாரிப்பாளர் சங்கத் தரப்பிலிருந்து இளையராஜாவிற்கு ஒருமித்த ஆதரவு உள்ளது. அவருக்குக் கிடைக்க வேண்டிய ராயல்டி தொகையில் அவர் பாதியை தயாரிப்பாளர்களுக்குத் தர தயாராக உள்ளார். அதை ஆரம்பித்தும் வைத்துவிட்டார்.
இசையமைப்பாளர் சங்கத்தினர், நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் என பலரும் இளையராஜாவைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும், இந்த காப்புரிமை, ராயல்டி விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
தன் பாடல்களுக்கான ராயல்டி தொகையில் கடந்த இரண்டு வருடங்களாக ஒரே நிலைப்பாட்டில் இருந்து வரும் இளையராஜா அதில் ஏதாவது மாற்றத்தைக் கொண்டு வர சம்மதிப்பாரா ?, சில விஷயங்களை விட்டுக் கொடுப்பாரா என்பது விரைவில் தெரிந்து விடும் என்கிறார்கள். அப்படி ஏதாவது மாற்றம் நடந்தால் அது இசை ரசிகர்களுக்கு இனிப்பான விஷயமாகவே இருக்கும் என்கிறார்கள்.