ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போடா போடி, நானும் ரெளடிதான் படங்களை இயக்கியவர் விக்னேஷ்சிவன். தற்போது சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யா-கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றனர். மேலும், நயன்தாராவின் மூன்றாவது காதலர் என்று கூறப்பட்டு வரும் அவர், நயன்தாரா நடித்து திரைக்கு வரத்தயாராகியுள்ள டோரா படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதுகுறித்து அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், டோரா படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். அதையடுத்து துருவங்கள் 16, மாநகரம் போன்ற படங்களுக்கு யுஏ கொடுத்தனர். ஆனால் அந்த படங்களுக்குப்பிறகு வந்த பல படங்களுக்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் தணிக்கைக்குழு மீதான காதல் தினம் தினம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.