ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த 2008ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியால் சுமார் 73 கோடி ரூபாய் இந்திய அரசுக்கு அன்னிய செலவாணி இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை கோல்கட்டா அணியின் உரிமையாளர்கள் ஷாருக்கான், அவரது மனைவி கவுரி, பங்குதாரார் நடிகை ஜூகி சாவ்லா ஆகியோர் மீது அன்னிய செலவாணி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் புதிய திருப்பமாக நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
நைட்ரைடர்ஸ் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2 கோடி பங்குகளை வெளியிட்டது. தனது பங்குகளில் 50 லட்சத்தை மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த தி சீ ஐலண்ட் நிறுவனத்துக்கு விற்றது. 40 லட்சம் பங்குகளை நடிகை ஜூகி சாவ்லாவிற்கு விற்றது. ஒரு பங்கின் மதிப்பு 99 ரூபாயாக இருந்த நிலையில் வெறும் 10 ரூபாய்க்கு பங்குகள் விற்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 73 கோடியே 63 லட்சம் ரூபாய் அன்னிய செலாவணி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தை மூவரும் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.