ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கம் தயாரிப்பாளர் கரண் ஜோகர். கடைசியாக இவரது இயக்கத்தில் ‛ஏய் தில் ஹே முஷ்கில்' என்ற படம் வெளியானது. இதில் ரன்பீர், ஐஸ்வர்யா, அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், படமும் ஓரளவுக்கு வெற்றியை பெற்றது. இந்தப்படம் வெளியானபோது ஐஸ்வர்யா ராய், மிகவும் கவர்ச்சியாக நெருக்கமாக நடித்திருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்ததோடு, இதுதொடர்பாக கரண் மீது அமிதாப் குடும்பத்தார் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதை அமிதாப் குடும்பத்தார் மறுத்தனர்.
ஆனால் சமீபகாலமாக கரண் ஜோகர், ஐஸ்வர்யா ராய் இடையே பிரச்னை நிலவி வருவது கண்கூடாக தெரிகிறது. அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில், ஐஸ்வர்யா ராயின் தந்தை காலமானபோது, அவருக்கு ஏராளமான திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். ஆனால் கரண் ஜோகர் மட்டும் அஞ்சலி செலுத்த வரவே இல்லை. மேலும் கரண் ஜோகர், ஐஸ்வர்யாவை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு அவரிடம் கதை சொன்னதாகவும், ஐஸ்வர்யா மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது ஐஸ்வர்யா - கரண் இடையே பிரச்னை நிலவுவது உறுதியாகியுள்ளது என பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.