ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பவர்பாண்டி படம் மூலம் இயக்குனராகியுள்ள நடிகர் தனுஷ், தன் தாய், தந்தை, சகோதரி மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளதோடு, எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை என்றார். நடிகர் தனுஷ் முதல் முறையாக இயக்கியுள்ள படம், பவர்பாண்டி. இதில், கதை நாயகனாக ராஜ்கிரண் நடித்துள்ளார். பிரசன்னா, ரேவதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. பின், நடிகர் தனுஷ் கூறியதாவது: உலகில், நல்லது, கெட்டது; அன்பு, வெறுப்பு என, இரண்டும் உள்ளது. இதில், நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம்; எதை நோக்கி போகிறோம் என்பது, நம் கையில்தான் உள்ளது. நேர்மறையான சிந்தனைகளை தேர்ந்தெடுத்தால், நிம்மதியாக இருக்கலாம்; இதுதான், பவர்பாண்டி.
இப்படத்திற்கான நம் மண்ணின் இசையை தர முயற்சித்துள்ளோம். எதிர்காலத்தில், நம் மண் இசையே நமக்கு தேவை. இப்படத்திற்கு, ராஜ்கிரண் கிடைத்தது மிகப்பெரிய ஆசிர்வாதம். உதவி இயக்குனர்கள், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னை இந்தளவுக்கு உயர்த்திய அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகள் மற்றும் ரசிகர்களுக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.
அம்மா, அப்பாவுக்கு நன்றி கூறிய தனுஷ், அவரது அப்பா, அம்மா யார் என்ற வழக்கு சர்ச்சை குறித்து, கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.