Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“பாடகர்களுக்கும் பங்கு இருக்கு” : இளையராஜாவுக்கு சலீம்குமார் கோரிக்கை..!

23 மார், 2017 - 15:25 IST
எழுத்தின் அளவு:
Actor-Salim-kumar-demands-Ilayaraja-on-Royalty-issue

மனதில் பட்டதை பளிச்சென பேசுபவர் தான் தேசிய விருதுபெற்ற பிரபல மலையாள நடிகர் சலீம் குமார். அதனாலேயே பல மலையாள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் இவர் மீது கருத்து வேறுபாடு கொண்ட நிகழ்வுகளும் பல உண்டு. அந்தவகையில் தற்போது கடந்த சில நாட்களாக தமிழ்சினிமாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள இளையராஜாவின் பாடல்களுக்கு ராயல்டி கேட்கும் விவகாரத்தில், பாடகர்களுக்கு ஆதரவாக தனது கருத்தை கூறியுள்ள சலீம்குமார், தனது கருத்தை இளையராஜாவுக்கான ஒரு திறந்த மடலாக எழுதியுள்ளார்.


“நீங்கள் உங்கள் முதல் பாடலுக்கு இசையமைக்கும்போது அதை உலகம் முழுக்க உள்ளவர்கள் பாடவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பீர்கள் தானே.. அப்படி இன்று உங்கள் பாடல்களை அதிகம் மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்தது எஸ்.பி.பி, சித்ரா மற்றும் மனோ போன்ற பாடகர்கள் தானே.. அவர்களுக்கும் உங்களது பாடல்களின் ராயல்ட்டியில் பங்கு கொடுப்பதில், அல்லது பாடுவதற்கு விட்டுக்கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது.. நீங்கள் உங்கள் பாடல்களை உருவாக்க கூடுகின்ற இடமான ஏதோ ஒரு கட்டடத்தை கட்டியவர், நீங்கள் வாசிக்கின்ற ஆர்மோனியத்தை கண்டுபிடித்த வெளிநாட்டுக்காரர், நீங்கள் ராகங்களை கடன் வாங்கி பயன்படுத்தும் கீர்த்தனைகளை எழுதிய தியாகராஜர் இப்படி பலருக்கும் உங்கள் பாடலின் ராயல்ட்டியில் பங்கு உண்டுதானே.. அவர்களுக்கு அந்த உரிமையை நீங்கள் கொடுத்திருக்கிறீர்களா..?


காலம் கடந்து நிற்கும் அற்புதமான பாடல்களை கொடுத்து இந்திய இசையை உலகறிய செய்தவர் நீங்கள். தலித் சமுதாயத்தில் இருந்து வந்து இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்குபவர் நீங்கள்.. அந்த சரித்திரம் உங்கள் பாடல்கள் மூலம் எதிரொலிப்பதை 'அனுமதி' என்கிற விஷயத்தை வைத்து தடை செய்ய வேண்டாம்” என இளையராஜாவை கேட்டுக்கொண்டுள்ளார் சலீம்குமார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in