ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பிறகு இயக்குனர்களும், நடிகர்களும் சமூக சேவையில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறார்கள். ராகவா லாரன்ஸ், ஹிப் ஆப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ்குமார், ஆரி ஆகியோர் அதில் முக்கியமானாவர்கள் தற்போது இயக்குனரும், நடிகருமான தங்கர் பச்சான் புதிய இயக்கம் ஒன்றை தொடங்க இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ் தான் என்னை எழுத்தாளனாகவும், இயக்குனராகவும், போராளியாகவும் ஆக்கி உள்ளது. என்னையும் என் குடும்பத்தை பற்றி மட்டும் யோசிக்காமல் இந்த சமூகத்தை பற்றி யோசிக்க வைத்திருக்கிறது. நெடுங்காலமாகவே ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் என்று என் நண்பர்களும், என் மீது அக்கறை கொண்டவர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அப்படி ஒரு எண்ணம் இல்லாமல் இருந்தேன். இப்போது அதற்கான தேவை வந்திருக்கிறது.
தமிழ் மக்களை இதுவரை சூறையாடிவர்களை விட சூறையாடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. வாக்குகளை விலைக்கு விற்று ஊழலுக்கும், சுரண்டலுக்கும் வழிவகுத்து கொடுத்துவிட்டோம். ஒண்ணறை கோடி இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இனி அவர்கள் அமைக்கிற ஆட்சியால்தான் வேலை வாய்ப்பை பெற்றுத்தர முடியும். அத்தகைய நிலையை உருவாக்க நம் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும். அதற்கு மக்களை தயார்படுத்த வேண்டும். அதற்கு ஒரு இயக்கம் வேண்டும். அதைத்தான் நான் தொடங்க இருக்கிறேன். தங்கர் பச்சான் என்ற தனி மனிதனாக இல்லாமல் ஒரு இயக்கமாக இந்த பணியை முன்னெடுத்துச் செல்ல இருக்கிறேன்.
இளைஞர்களுக்காக இந்த இயக்கத்தை வளர்த்தெடுத்து அவர்களிடமே ஒப்படைக்க இருக்கிறேன். இங்கும் கடல் கடந்தும் நம் நாட்டின் மீது அக்கறையும் கவலையும் கொண்டுள்ள ஒவ்வொரு இளைஞனையும் ஒன்று திரட்டி இந்த இயக்கத்தை பலப்படுத்த இருக்கிறேன். இவ்வாறு தங்கர் பச்சான் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.