ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டில் பிரபல நடிகராக திகழ்பவர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றார். சிறையில் சஞ்சய் தத் இருந்தபோது அவர் பாடல்கள் எழுதினார். தற்போது அந்தப்பாடலை அவர் நடிக்கவிருக்கும் படத்தில் பயன்படுத்த இருக்கிறார்கள். சஞ்சய் தத், பூமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ‛டொர்பாஸ்' என்ற படத்தில் நடிக்கிறார். ஆப்கானிஸ்தான் பின்னணியில் த்ரில்லர் படமாக உருவாக உள்ளது. ஆப்கனில், சிறுவர்கள் எப்படி தற்கொலை படையாக மாறுகிறார்கள் என்கிற கோணத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இதில் சஞ்சய், ராணுவ அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் தான் சஞ்யச் தத் எழுதிய சிறைப்பாடல்களை பயன்படுத்த உள்ளனர். பூமி படப்பிடிப்பை முடித்ததும் இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ளன. இப்படத்தை கிரிஷ் மாலிக் இயக்குகிறார்.