ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இளையராஜா இசையில் உருவான பாடல்களை, இனி பாடப் போவதில்லை என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார். இளையராஜா -எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூட்டணியில் உருவான, சினிமா பாடல்களுக்கு, இன்றும் வரவேற்பு உள்ளது.
மகன் ஏற்பாடு
திரையுலகிற்கு வந்து, 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், உலகம் முழுக்க இசை நிகழ்ச்சிகளை, எஸ்.பி.பி., நடத்தி வருகிறார். அவரது மகன் சரண் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
நோட்டீஸ்
இந்நிலையில், என் இசையில் உருவான பாடலை, என் அனுமதியின்றி எப்படி பாடலாம் என, இளையராஜா தரப்பிலிருந்து, எஸ்.பி.பி.,க்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்.பி.பி., தன், பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இரண்டு நாட்களுக்கு முன், இளையராஜாவின் வழக்கறிஞர், எனக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். பாடகி சித்ரா, சரண், விழா ஒருங்கிணைப் பாளர்கள் மற்றும் கச்சேரி நடைபெறும் இடங்களின் நிர்வாகி களுக்கும், நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
காப்புரிமை மீறல்
அதில், இளையராஜாவிடம் முன் அனுமதி பெறா மல், அவரது இசைஅமைப்பில் உருவான பாடல் களை மேடைகளில்பாடினால், அது காப்புரிமை மீறல். உரிமை மீறலுக்கு பெருந் தொகையை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது. எஸ்.பி.பி., - 50 என்ற நிகழ்ச்சி, என் மகன் சரணால் தயாரிக்கப்பட்டது. 2016 ஆகஸ்டில், கனடாவில், டொராண்டா நகரில், இந்நிகழ்ச்சியை துவக்கினோம். தொடர்ந்து ரஷ்யா, மலேஷியா என, பல நாடு களுக்கு சென்றோம்.
இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன்
இந்தியாவின்,பல நகரங்களி லும், இந்நிகழ்ச்சி நடந்துள்ளது. அப்போது, எந்த எதிர்ப்பும், இளையராஜா தரப்பில் இருந்து வரவில்லை. அமெரிக்காவில் நடத்திய போது, எதிர்ப்பு வந்துள்ளது ஏன் என, புரிய வில்லை. இதுபோன்ற சட்டம் குறித்து, எனக்கு விபரம் தெரியாது. இருந்தாலும், சட்டத்தைமதிப்பது என் கடமை. இனி, மேடைகளில் இளையராஜா பாடல்களை பாடப் போவதில்லை. அதே வேளையில், ஏற்கனவே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
பெரிதுப்படுத்த வேண்டாம்
இறைவன் அருளால், மற்ற இசையமைப்பாளர் களின் பாடல்களையும், அதிகம் பாடியுள்ளேன்; அவர்கள் ஆதரவு தருவர் என, நம்புகிறேன். இப்பிரச்னை தொடர்பாக, எந்த ஒரு கடுமையான வாதங்களையும், கருத்துக்களையும் கூற வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். இது, கடவுளின் கட்டளை என்றால், அதை நான் பணிவுடன் கடைபிடிப்பேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.இளையராஜா - எஸ்.பி.பி., இடையே உருவாகி யுள்ள இந்தப் பிரச்னை, இசையுலக ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தவறாக புரிந்து விட்டனர்
இளையராஜாவின் ஆலோசகர் பிரதீப்குமார் வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பியதை, மக்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டனர். வணிக ரீதியில், அவரது பாடல்களை பயன்படுத்துவோருக்கே, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாதாரண மேடைகச்சேரி நடத்துவோர், ராயல்டி செலுத்த வேண்டியதில்லை என, தெரிவித்துள்ளார்.