ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'கபாலி' படத்திற்குப் பிறகு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 14ம் தேதி ஆரம்பமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் சில காட்சிகள் மட்டுமே படமாக வேண்டியுள்ளது. அது எப்படியும் இந்த மாதத்தில் முடிந்துவிடும் என்கிறார்கள். அதன் பின் சில நாட்கள் மட்டுமே ஓய்வெடுத்துக் கொள்ளும் ரஜினிகாந்த் அடுத்து பா.ரஞ்சித் படத்தில் நடிக்க வந்துவிடுவாராம்.
இந்தப் புதிய படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் அவருடைய சொந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இன்னும் இந்தப் படத்தின் நாயகி யார் என்பது முடிவாகவில்லை. சில வாரங்களுக்கு முன்பு ஹிந்தி நடிகையான வித்யா பாலன் நடிக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. அவரும் பொறுத்திருந்து பாருங்கள் என்று சொல்லியிருந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகின. ஹாலிவுட் வரை சென்று விட்ட தீபிகா, தமிழ்ப் படங்களில் நடிக்க முன் வருவார் என்பது சந்தேகம்தான்.
'கபாலி' படம் போலவே தமிழில் பிரபரமில்லாத ஒரு ஹிந்தி நடிகையை அழைத்து வந்தாலும் வருவார்கள் போலிருக்கிறது.