ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
50 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டவர் ஜி.வி.பிரகாஷ். முன்னணி இசையமைப்பாளரான நேரத்தில் திடீரென்று டார்லிங் படம் மூலம் ஹீரோவாக ரசிகர்களை சந்தித்த அவர், தற்போது கோடம்பாக்கத்தில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார்.
பகலில் நடிப்பு, இரவில் இசையமைப்பு என பிசியாக செயல்பட்டு வருகிறார் ஜி.வி.பிரகாஷ். நேற்று முன்தினம் அவர் நடித்த புருஸ்லீ படம் வெளியானது. படம் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கவில்லை. என்றாலும், அவரிடம் புதிய படங்களுக்காக கதை சொல்லச்செல்லும் டைரக்டர்களின் படையெடுப்பு குறைந்தபாடில்லை.
அதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களுக்கு நேரம் ஒதுக்கி கதையை கேட்கும் ஜி.வி.பிரகாஷ், எப்போது கால்சீட் என்று அவர்கள் கேட்டால், இப்போது என் கைவசம் பாலா, வெற்றிமாறன், ராஜீவ்மேனன் ஆகியோர் படங்கள் மட்டுமின்றி, மேலும் 4 புதுமுக டைரக்டர்கள் படங்களும் உள்ளன. இந்த படங்களை முடிக்க கண்டிப்பாக இன்னும் 3 வருடமாகி விடும். அதனால் அதன்பிறகுதான் என்னால் கால்சீட் கொடுக்க முடியும். முடிந்தால் அது வரைக்கும் காத்திருங்கள். இல்லையென்றால் இந்த கேப்பில் இரண்டொரு படத்தை இயக்கி விட்டு வாருங்கள் என்கிறாராம்.
மேலும், நீங்கள் 3 வருடம் கழித்து என்னிடம் வரும்போது, எனது சம்பளம் 10 கோடியாகியிருக்கும். அதனால் அதற்கும் தயார் நிலையில், தயாரிப்பாளரை அழைத்து வாருங்கள் என்கிறாராம் ஜி.வி.பிரகாஷ். அவர் 3 வருடம் கழித்துதான் கால்சீட் தருவேன் என்பதை கேட்டே அதிர்ச்சியடையும் டைரக்டர்கள், அவர் அப்போது தனது சம்பளம் 10 கோடியாக இருக்கும் என்று சொன்னதைக்கேட்டு இன்னும் பேரதிர்ச்சியடைந்தவர்களாக வெளியேறுகிறார்கள்.