ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் படங்களில் சிகரமாக இருப்பது மரோசரித்ரா. 3 மொழிகளில் மகத்தான சாதனை படைத்த திரைப்படம். 1978ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தின் சாதனையை வேறு எந்தப் படமும் முறியடிக்கவில்லை. பாலச்சந்தரின் நண்பர் ராம அரங்கண்ணலுக்காக அவர் தெலுங்கில் இயக்கிய படம்.
அதற்கு முன் சில தோல்விகளை சந்தித்திருந்த கே.பாலச்சந்தர், ஒரு காதல் கதையின் மூலம் வெற்றி பெற நினைத்தார். கமல்ஹாசனை வைத்து தமிழில் ஒரு காதல் படம் இயக்க முடிவு செய்திருந்தார். ஆனால் தெலுங்கில் படம் இயக்குகிற சூழ்நிலை. தான் நினைத்திருந்த காதல் கதையை தெலுங்கில் இயக்குவோம், அங்கு வெற்றி பெற்றால் அதை அப்படியே தமிழில் இயக்குவோம் என்று முடிவு செய்து தெலுங்கில் மரோசரித்திராவை இயக்கினார்.
தமிழ்நாட்டு இளைஞனுக்கும், தெலுங்கு பெண்ணுக்குமான காதல் கதை. காதலின் தீவிரத்தையும் அந்த காதல் சிதைக்கப்படும்போது காதலர்கள் எடுக்கும் பகீர் முடிவும்தான் கதை. தெலுங்கு சாயல் கொண்ட பெண்ணை தேடி இறுதியாக கேரளாவைச் சேர்ந்த சரிதாவை தெலுங்கு பெண்ணாக அறிமுகப்படுத்தினார். ஆக்ஷ்ன் படங்களை விரும்பி பார்க்கும் ஆந்திர ரசிகர்கள் இந்த காதல் படத்தை ஏற்பார்களா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி படம் ஆந்திராவில் இரண்டரை வருடங்கள் ஓடி சாதனை படைத்தது.
தெலுங்கின் பெரிய வெற்றிக்கு பிறகு மரோசித்ராவை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார் அரங்கண்ணனல். ஆனால் பாலச்சந்தர் தெலுங்கு மொழியிலேயே வெளியிட்டு பார்ப்போம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டால் தமிழில் எடுப்போம் என்றார். ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் தமிழ் நாட்டு மக்கள் மரோ சரித்திராவை தெலுங்கிலேயே பார்த்து முடித்து விட்டார்கள். சென்னை சபையர் தியேட்டரில் 596 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
அதன்பிறகு தமிழில் மீண்டும் எடுப்பதை கைவிட்ட கே.பாலச்சந்தர். எல்.வி.பிரசாத் தயாரிப்பில் இந்தியில் பிரமாண்டமாக எடுத்தார். கமல் தமிழ் இளைஞனாகவே மீண்டும் நடித்தார். அவருக்கு ஜோடியாக புதிய வார்ப்புகள் படத்தில் நடித்த ரதி அக்னிகோத்ரி நடித்தார். இந்தியில் ஏக் துஜே கேலியே என்ற பெயரில் வெளிவந்த மரோசரித்ரா அங்கு 80 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய தேரே மேரே பீச்சமே.... பாடல் இப்போதும் இந்தியின் காதல் தேசிய கீதமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. மரோச்சரித்திரா வெளியாகி இது 40வது ஆண்டு.