ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கியவர் யுரேகா. இயற்பெயர் ஜோசப் மோகன் குமார். திரைப்பட இயக்குனர் மட்டுமல்ல எழுத்தாளர், கவிஞர். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். சிவப்பு எனக்கு பிடிக்கும் படத்தில் பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை சொன்னார், தொப்பி படத்தில் மலைவாழ் இளைஞன் ஒருவனின் வாழ்வியலை சொன்னார். மதுரை சம்பவம் படத்தில் மதுரை தாதாக்களின் கதை சொன்னார்.
யுரேகாவிற்கு ஜெருசலேமில் உள்ள நைட்ஸ் ஆப் மாஸ்டர் என்ற அமைப்பு செவாலியர் என்ற விருது வழங்கியுள்ளது. 32 வருட கலை மற்றும் இலக்கிய சேவைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்த விருது எனக்கு கலைப்பணிக்கும், எழுத்துப் பணிக்கும் கிடைத்த பெரிய அங்கீகாரம். இந்த விருதை நான் எதிர்பார்க்கவில்லை. எனது சிவப்பு எனக்கு பிடிக்கும் படம்தான் இந்த விருதை பெற்றுத்தர காரணம். மிகுந்த கவனத்துடனும், அக்கறையுடனும் இனி வரும் படைப்புகளை தர வேண்டும் என்ற எண்ணத்தை இந்த விருது வழங்கி உள்ளது" என்கிறார் யுரேகா.