ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நம்ம ஊரில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களுக்கு நம் உள்ளூர் மக்கள் அங்கீகாரம் கொடுப்பது பெருமைதான் என்றாலும், நம்மவர்களை வெளிநாட்டினர் பாராட்டும்போது தான் அவர்களுக்கான கூடுதல் அங்கீகாரம் கிடைத்ததாக கிடைக்கிறது. அப்படி ஒரு கெளரவம், அதிர்ஷ்டம் பின்னணி பாடகி ஸ்ரேயா கிடைத்திருக்கிறது. ஆம்.. ஸ்ரேயாவின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப்புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸின் டெல்லி மியூசியத்தில் முதல் இந்திய பாடகராக இவரது மெழுகுச்சிலை நிறுவப்படவுள்ளது.
இந்தி மட்டுமல்லாது தமிழ் படங்களிலும் மனதை மயக்கும் பாடல்களை பாடி, இந்திய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஸ்ரேயா கோஷல்.. அதனாலேயே ஸ்ரேயா பாடுவது போன்று அவரது மெழுகுச்சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், அங்கு வரும் பார்வையாளர்கள் அவருடன் புகைப்படம் எடுக்க அதிகளவில் விரும்புவார்கள் என்றும் அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது. மிகப்பெரிய நடிகர்கள், கலைஞர்கள், பிரபலங்களுக்கு மத்தியில் தமது உருவதும் இடம்பெறுவது பெருமையளிப்பதாகவும் காலத்துக்கும் அழியாமல் இருப்பது என்பது அற்புதமானது என்றும் ஸ்ரேயா கோஷல் குறிப்பிட்டுள்ளார்.