ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொட்டன்ஷியல் ஸ்டூடியோ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் மாநகரம். சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா நடித்துள்ள இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். படம் வெளிவந்து பாசிட்டிவான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து பாராட்டினார். இதுகுறித்து இயக்குனர் யோகேஷ் கனகராஜ் கூறியதாவது:
எனக்கு திடீரென்று ஒரு போன் வந்தது. "கண்ணா நான் ரஜினிகாந்த் பேசுறேன்" என்றது அந்த குரல். எனக்கு அதிர்ச்சி... யாரோ நம்மை கலாய்க்கிறார்கள் என்று நினைத்து தயங்கினேன். "கண்ணா நான் ரஜினி தான் பேசுறேன் ஹா...ஹா... படம் பார்த்தேன் கலக்கீட்டீங்க. சூப்பர்... சூப்பர்.. நல்ல படம் சீட் நுனியில் உட்கார்ந்துதான் படம் பார்த்தேன். கலக்குங்க... கலக்குங்க..." என்றார். நான் ஆச்சர்யத்திலிருந்து வெளிவர ரொம்ப நேரம் ஆனது. ரொம்ப நன்றி சார் என்ற மட்டும் தான் சொன்னேன். வேறெதும் சொல்லத் தோணவில்லை. என்றார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு கூறும்போது "சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டு வாங்குது இது இரண்டாவது முறை. ஏற்கெனவே நான் தயாரித்த ஜோக்கர் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். இப்போது மாநகரத்தை பார்த்துவிட்டு பாராட்டினார். "நல்ல ஸ்டோரி செலக்ட் பண்ணி புரட்யூஸ் பண்றீங்க" என்றார். இந்த வாழ்த்து பல விருதுகளுக்கு சமம் என்றார் எஸ்.ஆர்.பிரபு.