ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பத்மாவதி படக்குழு மீது தாக்குதல் நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. ‛பாஜிராவ் மஸ்தானி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‛பத்மாவதி என்ற சரித்திர படத்தை இயக்குகிறார். இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்புகள் மகாராஷ்டிராவில் உள்ள கோல்ஹாபூரில் நடக்கிறது. இதற்கான தனி அரங்கம் உருவாக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடந்து வந்தன.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் இந்த படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர், படப்பிடிப்பு தளத்தை அடித்து நொறுக்கி நாசம் செய்ததோடு, தீ வைத்தும் கொளுத்தினர். இதில் படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. நல்ல வேளை இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. இதுகுறித்து கோல்ஹாபூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ‛பத்மாவதி படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்தபோது, அங்கு வந்த கர்ணி சேனா என்ற அமைப்பு, படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட படக்குழுவினரை தாக்கியதோடு, படப்பிடிப்பு தளத்தையும் சேதப்படுத்தினர். தற்போது மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியிருப்பது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.