சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அமரகாவியம், எட்டுத்திக்கும் மதயானை, புத்தகம் ஆகிய படங்களில் நடித்தவர் ஆர்யாவின் தம்பி சத்யா. ஆனால் அவர் நடித்த எந்த படங்களும் வெற்றி பெறாததால் அதையடுத்து அவர் கமிட்டான சில படங்களும் சிலநாட்கள் படப்பிடிப் போட்டு நிறுத்தப்பட்டன. அதனால் ஆர்யாவின் ஹோட்டல் பிஸ்னஸை கவனித்து வந்தார் சத்யா. ஆனபோதும், தனது நடிப்பு தாகத்தை அவ்வப்போது அண் ணன் ஆர்யாவிடம் வெளிப்படுத்திக்கொண்டே வந்ததால், தற்போது சந்தனத் தேவன் படத்தில் சத்யாவுக்கு சிபாரிசு செய்து நடிக்க வைத்திருக்கிறார் ஆர்யா.
மேலும், இந்த படத்தில் எப்படியேனும் தம்பியை வெற்றிப்பட நடிகராக்கி விட வேண்டும் என்பதற்காக, அவருக்கான காட்சியை டைரக்டர் சொல்லிக்கொடுத்தபோதும், தானும் ஸ்பாட்டில் நின்று அவர் நடிப்பதை கவனிக்கிறார் ஆர்யா. ஒருவேளை அவர் சரியாக நடிக்கவில்லை என்றால், உடனே களமிறங்கி இந்த மாதிரி நடிக்க வேண்டும் என்று நடித்துக்காட்டுகிறார். அதோடு, மதிய இடை வேளை நேரங்களில் அடுத்தபடியாக சத்யா நடிக்க வேண்டிய டயலாக் பேப்பர் களை கையில் வைத்துக்கொண்டு ரிகர்சல் பார்க்கிறாராம் ஆர்யா. அதனால் சந்தனத்தேவனில் சத்யா நடிப்பில் பெரிய அளவில் தேறி விடுவார் என்கிறார்கள்.