ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான சென்னையிலுள்ள ஆர்.கே. நகருக்கு ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் வருவது தெரிந்ததே. இந்த தொகுதியில் பலப்பரீட்சைப்பார்க்க பல கட்சிகளும் வரிந்து கட்டுகின்றனர். குறிப்பாக, ஓபிஎஸ்சுடன் பலப்பரீட்சை பார்க்க அதிமுகவும், அதிமுகவை ஓரங்கட்டி தொகுதியை கைப்பற்ற திமுகவும் வியூகம் வகுத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில், பாஜக ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிடுவது கேள்விக்குறியாக இருந்து வந்தநிலையில், தற்போது பாஜகவும் போட்டியில் குதிக்க தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில், நடிகை கெளதமியை வேட்பாளராக நிறுத்தப்போகிறார்களாம். ஜெயலலிதா இறந்த பிறகு அவரது இறப்பு குறித்து யாரும் விசாரணை கமிஷன் வைக்க வேண்டும் என்று முதன்முதலாக கோரிக்கை வைத்தவரே கெளதமிதான். அந்த வகையில், அவருக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பு இருப்பதால், ஆர்.கே. நகரில் கெளதமியை களமிறக்கினால் ஜெயலலிதா இடத்தை இவர் கைப்பற்றி விடுவார் என்று பாஜக வட்டாரம் யோசனை செய்து கொண்டிருக்கிறதாம்.