ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அட்டகத்தி தினேஷ் நாயகனாக நடித்த ஒருநாள்கூத்து படத்தில் நாயகியாக நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டு பெண்ணான இவர், அந்த படத்தில் மாடர்ன் கெட்டப்பில் நடித்தார். அதையடுத்து உதயநிதியின் பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் கமிட்டானார். ஆனால் இந்த படத்தில் நடிக்க அவர் கதையே கேட்கவில்லையாம். கதாநாயகி வேடம் என்றதும் கண்ணை மூடிக்கொண்டு கமிட்டாகி விட்டாராம்.
அதையடுத்து, படப்பிடிப்புக்கு போனபிறகுதான், செகண்ட் ஆப்பில் தனது கேரக்டர் என்ட்ரியாவது அவருக்கு தெரிந்திருக்கிறது. அதோடு, கதைப்படி அரசியல் தாதா பார்த்திபனின் மகளாக நடித்துள்ள நிவேதா, உதயநிதிக்கான காதல் காட்சிகள் சிறிது நேரம்தான் வருகிறதாம். அதிலும் நிவேதாவுக்கு பர்பாமென்ஸ் பண்ண பெரிய ஸ்கோப் எதுவும் இல்லையாம். இதனால் கதையே கேட்காமல் நடித்த என்னை இப்படி டம்மி பண்ணி விட்டார்களே என்று தனது அபிமானிகளிடம் சொல்லி புலம்பி வருகிறார் நிவேதா.
அதோடு, இது எனக்கு நல்ல பாடம். இனிமேல் எந்த படமாக இருந்தாலும் மொத்த கதையையும் சீன் பை சீன் கேட்காமல் ஒத்துக்கொள்ள மாட்டேன். இரண் டாவது படத்திலேயே நான் சினிமாவை கற்றுக்கொண்டேன் என்று கூறி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.