ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா தொழில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தெரிவித்துள்ளார். ஆர்.கே., நீத்து சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள படம் வைகை எக்ஸ்பிரஸ். சாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து பேசிய நாசர், சினிமா தொழில் நஷ்டத்தில் இயங்குவதாக தெரிவித்தார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது...
நான் 500 படங்களை கடக்கப் போகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்தது வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நான் நடித்தது என்பதற்காக அல்ல, அதிக சம்பளம் கொடுத்தார்கள் என்பதற்காக வரவில்லை. ஒரு குடும்பம் போல படப்பிடிப்பு மகிழ்ச்சியாக போனது என்பதற்காக வரவில்லை. எல்லாரும் தொடாத ஒரு விஷயத்தை துணிச்சலாக செய்கிறாரே ஆர்.கே. அதற்காக தான் வந்தேன், அது வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தவே வந்தேன்.
இன்று தயாரிப்பாளர்கள் படும் வேதனைகள் கொஞ்சமல்ல. தயாரிப்பாளர்கள் ஏமாற்றப் படுகிறார்கள், அவமானப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள். இதற்கெல்லாம் ஆர்.கே.வின் திட்டம் ஒரு தீர்வாக இருக்கும். சினிமாவை காப்பாற்ற வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கிறது. ரஜினியை வைத்து படங்கள் எடுக்கலாம், வளரலாம் என்ற கனவுகளுடன் தான் தயாரிப்பாளர்கள் இந்த துறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர்கள் படும் கஷ்டங்களை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. சினிமாவில் பணத்தை இழந்து நஷ்டமடைவது ஒரு புறம் இருந்தாலும் அவர்கள் ஏமாற்றப்படும் சூழ்நிலையும் இருக்கிறது. சினிமா தொழில் நஷ்டத்தை போக்க தீர்வு காண வேண்டும் என்றார்.