ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது நிச்சயதார்த்தம் ஏன் ரகசியமாக நடந்தது என்பதற்கு நடிகை பாவனா விளக்கமளித்துள்ளார். தமிழ், மலையாளம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை பாவனா. சமீபத்தில் கேரளாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது சில வக்கிர புத்திக்காரர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். இது கேரளாவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. பாவனாவிற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் குரல் கொடுத்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாவனாவின் இல்லத்தில் பாவனாவிற்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். சினிமா பிரபலங்களுக்கு கூட அழைப்பில்லை. நடிகைகள் மஞ்சு வாரியர் மட்டும் கலந்து கொண்டார். இதனிடையே, தனது நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்தது ஏன்..? என்று நடிகை பாவனா விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... இது திடீரென எடுத்த முடிவு தான். நிச்சயதார்த்தத்தை விளம்பரப்படுத்தக்கூடாது என்பதற்காகவே ரகசியமாக நடத்தினேன். என் நண்பர்களுக்கு கூட அழைப்பு விடுவிக்கவில்லை, தகவல் மட்டும் சொன்னேன். திருமணத்திற்கு அனைவரையும் அழைப்பேன். நவீனை கடந்த 5 வருடங்களாக எனக்கு தெரியும். என் முதல் கன்னட படத்தை தயாரித்தவர் அவர் தான்'' என்று கூறியுள்ளார்.