ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் தற்போது இயக்கி வரும் 'காற்று வெளியிடை' படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்க உள்ள படத்தில் தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிக்க உள்ளார் என்று டோலிவுட் வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக செய்தி பரவி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் ராம் சரணுடன் 'துருவா' படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த்சாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிறார்கள்.
தமிழ் நடிகரான அரவிந்த்சாமி மணிரத்னம் இயக்கிய 'தளபதி' படத்தில்தான் நடிகரான அறிமுகமானார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமான 'ரோஜா' படத்தின் நாயகன் அரவிந்த்சாமிதான். மணிரத்னம் இயக்கிய 'அலைபாயுதே' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்த அரவிந்த்சாமி அடுத்து மணிரத்னம் இயக்கிய படங்களில் நடிக்கவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க உள்ளார்.
மணிரத்னம் 'ஓ காதல் கண்மணி' படத்தை இயக்குவதற்கு முன்பு ராம்சரணையும், அவருடைய அப்பா சிரஞ்சீவியையும் சந்தித்துப் பேசினார். அப்போதே அவர்கள் இணைந்து படம் பண்ணப் போவதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்போது மீண்டும் மணிரத்னம் - ராம்சரண் இணையப் போவதாக செய்திகள் உலா வருகின்றன. இது உண்மையாகுமா அல்லது செய்தியுடன் நின்று போகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.