ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
திரைப்பட நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள பல ரசிகர்களுக்குப் பேராவல் இருக்கும். அதை சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகளே உதாரணம். பின்னணிப் பாடகி சுசித்ரா டிவிட்டரில் வெளியான புகைப்படங்களைப் பார்த்து திரையுலகமும், ரசிகர்களும் எந்த அளவிற்கு அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு பிரகாசமாக இருக்காது என்பது பலருக்குத் தெரியாது.
தியாகராஜ பாகவதர் காலம் முதல் இன்றைய காலம் வரை பல மர்மங்கள் நிறைந்த வாழ்க்கையாகவே பலரின் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. கருப்பு, வெள்ளை காலத்தில் தமிழ், தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக விளங்கிய நடிகை சாவித்ரியின் தனிப்பட்ட வாழ்க்கையும் பல மர்மங்கள் நிறைந்த வாழ்க்கைதான். அவருக்கும் நடிகர் ஜெமினிகணேசனுக்குமான காதல், திருமணம், பிரிவு என அந்தக் காலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டவை. கடைசி காலத்தில் கடன் தொல்லையாலும், குடிப் பழக்கத்தாலும் பாதிக்கப்பட்டு 44 வயதிலேயே மரணமடைந்தவர் சாவித்ரி என்று அந்தக் காலக் கட்டத்தில் பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன. அவையெல்லாம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கும் 'நடிகையர் திலகம்' படத்தில் இடம் பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை கொண்டாட்டமாகவும், முழுமையான நேர்மையாகவும் படைக்க ஆசைப்படுகிறேன். அவருடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை குறிப்பிட உள்ளேன். அவருடைய குணத்தை பெருமைப்படுத்தும் பல சிறு சம்பவங்கள் அவருடைய வாழ்க்கையில் நடந்துள்ளன. ஒரு அற்புதமான மனிதர், அவருடைய நடிப்புத் திறமைக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை.
புகைப்படங்களைத் தவிர வேறு எந்த சரியான ஆதாரமும் அவரைப் பற்றி இல்லை. தமிழ், தெலுங்கு திரையுலகத்தின் 50, 60 களில் நடந்த பல விஷயங்களை மீண்டும் உருவாக்க என்ன தேவையோ அவற்றிற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதை அப்படியே கொடுக்க உள்ளோம்,” என்று இயக்குனர் நாக் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
படம் ஆரம்பமாகும் போதே எந்த ஒரு சர்ச்சையையும் ஏற்படுத்தாமல் இருந்தால் சரி.