ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது மகன் விஜய்யை வைத்து ஆரம்பத்தில் மூன்று படங்களை தொடர்ச்சியாக இயக்கினார். அதேபோல், பி.வாசுவும் தனது மகன் சக்தி நடித்த முதல் படத்தை இயக்கினர். கஸ்தூரிராஜாவும் தனது மகன் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தை இயக்கினார். இப்படி பல டைரக்டர்கள் தங்களது வாரிசுகள் நடித்த முதல் படத்தை இயக்கி அவர்களை அறிமுகம் செய்து வந்துள்ளனர். அந்த வரிசையில், தம்பி ராமைய்யாவும் தனது மகன் உமாபதியை வைத்து படம் இயக்குவதாக இருந்தார். ஆனால் படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் மகனை அறிமுகம் செய்யும் பொறுப்பை இன்ப சேகரன் என்ற புதுமுக இயக்குனருக்கு வழங்கினார்.
அந்த வகையில், தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி, நடித்துள்ள அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தை இன்பசேகரன் இயக்கியுள்ளார். ஆனால் இந்த படத்தில் அவர் நடித்து வந்தபோதே, தண்ணி வண்டி என்ற படத்திலும் கமிட்டாகி நடித்தார் உமாபதி. ஆனால் அந்த படம் கிடப்பில் கிடக்கிறது. அதையடுத்து தேவதாஸ் 2016 என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் இப்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்நிலையில், இன்பசேகரன் இயக்கியுள்ள அதாகப்பட்டது மகாஜனங்களே படம் மார்ச் 17-ந்தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் லாரன்ஸின் மொட்ட சிவா கெட்ட சிவா படத்திற்கு 400 தியேட்டர்களை கைப்பற்றி விட்டதால் இப்போது மார்ச் 24-ந்தேதி வெளியிட திட்டமிடுள்ளனர்.
மேலும், இந்த படங்களுக்குப்பிறகு மகனை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறாராம் தம்பி ராமைய்யா. ஏற்கனவே மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கிய அவர், மகன் உமாபதி நடிக்கும் படத்தை ரொமான்டிக் காமெடி கதையில் இயக்குகிறாராம்.