ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை பாவனாவுக்கு நேற்று, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து, காரில் சென்ற போது, ஒரு கும்பலால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது குறித்து, போலீசில் புகார் செய்தார். பாவனாவுக்கு ஆதரவாக ஒட்டு மொத்த திரையுலகமே திரள, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் நேற்று, கேரள மாநிலம், திருச்சூரில் நிச்சயதார்த்தம் நடந்தது. பல ஆண்டுகளாக, நவீனை, பாவனா காதலித்து வந்தார்.
இரு வீட்டு உறவினர்கள் மட்டுமே, நிச்சயதார்த்தத்தில் பங்கேற்றனர். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட உள்ளது. பாவனாவுக்கு, திரை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.