Advertisement

சிறப்புச்செய்திகள்

ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

பாலியல் குற்றவாளிகளை நிற்க வைத்து சுட்டுத்தள்ள வேண்டும்! -சமையல் மந்திரம் திவ்யா கோபம்

09 மார், 2017 - 10:36 IST
எழுத்தின் அளவு:
Shoot-the-Rape-accused-says-Samayal-Manthiram-Divya

சமையல் மந்திரம், ஐ அந்தரங்கம் போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் திவ்யா. தவிர, சினிமா-சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வரும் அவர், தற்போது ஸ்ரீ ஆரோக்யா ஏசியன் எஜிகேசன் டிரஸ்ட் என்றொரு அமைப்பை தொடங்கி சமூக சேவை செய்து வருகிறார். அடுத்து, கலாச்சார பாதுகாப்பு சங்கம் என இன்னொரு அமைப்பையும் தொடங்கி பெண்களுக்கான இலவச சட்ட உதவி செய்யப்போவதாக சொல்கிறார். தினமலர் இணையதளத்திற்காக திவ்யா அளித்த பேட்டி...


தற்போது ஸ்ரீ ஆரோக்யா ஏசியன் எஜிகேசன் டிரஸ்ட் தொடங்கியிருக்கிறேன். இதன் நோக்கம் என்னவென்றால், ஏழை மக்களுக்கு இலவச மெடிக்கல் செக்கப் அளிப்பது. படிக்கிற பிள்ளைகளுக்கு முடிந்த டொனேசன் கொடுப்பது. இதை எதிர்காலத்தில் பெரிய அளவில் செய்ய திட்டமிட்டுள்ளேன். இந்த டிரஸ்ட்டில் இப்போது 500 பேர் உள்ளனர். எங்கள் டிரஸ்ட் மூலம் மற்ற டிரஸ்டுகளுக்கும் உதவி செய்கிறோம். எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்வது. இதுதவிர பிரீசர் உதவி செய்வது. 500 குழந்தைகளையாவது எங்களது டிரஸ்டில் எடுத்து வளர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது டார் கெட்டாக உள்ளது.


டிவி நிகழ்ச்சிகள் பண்ணி வந்த நீங்கள் சமூகசேவையில் இறங்கி விட்டது ஏன்?


என்னைப்பொறுத்தவரை சேனலில் சமையல் மந்திரம் நிகழ்ச்சியைகூட ஒரு சோசியல் ஒர்க்காக நினைத்துதான் பண்ணி வந்தேன். செக்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியாகத்தான் செய்து வந்தேன். ஆனால் மக்களுக்கு அதை புரிய வைக்க முடியவில்லை. எல்லோரது மைண்டு செட்டும் ஒரேமாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. திவ்யா வந்து என்ன லிப்ஸ்டிக் போட்டுட்டு வர்றாங்க என்றுதான் பார்த்தாங்களே தவிர, என்ன சொல்றாங்கங்கிறதை அவங்க கவனிக்கல. என்ன டிரஸ் போடுறாங்க என்கிற தாட்டுதான் இருந்ததே தவிர, என்னோட மனசுல என்ன தாட் இருந்ததுன்னு யாரும் நினைக்கல. ஆனால் இந்த சோசியல் ஒர்க் மூலமாக எல்லோருக்கும் புரிய வைக்க முடியும். அதாவது ஆன் ஸ்கிரீன் ஒன்று இருக்கு, ஆப் ஸ்கிரீன் ஒன்று இருக்கு. ஆப் ஸ்கீரின்ல திவ்யா எப்படிங்கிறது மத்தவங்களுக்கு தெரியாது. அதுதான் இப்ப நான் பண்ணிக்கிட்டிருக்கேன். ரொம்ப நாளா இதை பண்ணிட்டு வர்றேன். இப்பதான் பெருசாக இறங்கி பண்ணத் தொடங்கியிருக்கிறேன். இப்போதைக்கு சென்னை மட்டும்தான் செய்றோம். எதிர்காலத்தில் தமிழ்நாடு முழுக்க கொண்டு வரவேண்டும் என்பதுதான் நோக்கம்.


மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து, இப்போது நெடுவாசல் போராட்டத்திலும் என்னோட வாய்ஸ் சோசியல் மீடியாவில் ஒலித்து வருகிறது. தமிழ் நாட்டில் என்ன பிரச்சினை நடந்தாலும் என்னோட வாய்ஸ் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயிருக்கும். நெடுவாசலுக்கு செல்வதாக இருந்தேன். ஆனால் எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் செய்ய வேண்டியிருந்ததால் என்னால் போக முடியவில்லை. எனது டீமைச்சேர்ந்த சிலர் சென்று வந்தனர்.


மகளிர் தினம் பற்றி?


தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு ரொம்பவே குறைந்து விட்டது. ஒரு ஹாசினி, ஒரு நந்தினி இந்த மாதிரி பெண்களுக்காகவும் நான் குரல் கொடுத்திருந்தேன். தப்பு பண்றவங்களுக்கு தண்டனையை அதிகப்படுத்தனும். குற்றவாளியை கூட்டிட்டுப்போய் உட்கார வச்சு, மூணு வேளை சோறு போட்டு தங்கிறதுக்கு இடம் கொடுத்தா எவன் திருந்துவான். தப்பு பண்றவனை ஜெயில்ல போடக்கூடாது. அரபு நாட்டுல தண்டனை கொடுக்கிறது மாதிரி, நிக்க வச்சு சுடனும். ஒருத்தனுக்கு இப்படி செய்தா இன்னொருத்தன் அந்த மாதிரி தப்பு பண்ண பயப்படுவான். இல்லேன்னா ஒரு ரெண்டு மூணு வருசம் ஜெயிலுக்கு போயிட்டு வந்து திரும்பவும் அதே தப்ப செய்வான். இந்த எண்ணத்தை மாற்ற நிக்க வச்சு சுடனும். இல்லே என்னை மாதிரி பொண்ணுக்கிட்ட விட்டா நானே சாகடிச்சிடுவேன்.


பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிவதுதான் இந்தமாதிரி பாலியல் வன்கொடுமைகள் நடக்க காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறதே?


சில ஆம்பளைங்க பொண்ணுங்களோட டிரஸ்ஸிங் சரியில்ல. அதனால்தான் பசங்க கெட்டு போறாங்கன்னு சொல்றாங்க. அப்படி பார்த்தா 6 வயசு, 3 வயசு குழந்தைங்களுக்கு என்ன தெரியும். அவங்களுக்கெல்லாம் டிரஸ்ஸிங்ன்னா என்ன தெரியும். அதைப்பார்த்தே அவங்களுக்கு உணர்ச்சி வருதுன்னா, அவங்களோட பார்வை தப்பா, டிரஸ் தப்பா. பார்வைதான் தப்பு. அதைதான் மாத்தனும். எந்த ஆண்கள் சோசியல் மீடியாவில் கருத்து சொன்னாலும் நீ ஒழுங்கா டிரஸ் போடுங்கிறதுதான். ஆம்பளைங்க ஒழுங்கா இருக்காங்க என்கிறார்கள். டிரஸ்ஸ ஏன் பார்க்கிறீங்க. யாரை எப்ப குறை சொல்லலாம்னு இருக்காங்க. இதுதான் எனக்கு மனசு வேதனையாக உள்ளது.


இன்னும் ஒரு மாதத்தில் கலாச்சார பாதுகாப்பு சங்கம் என ஒரு அமைப்பினை ஆரம்பிக்கப்போகிறோம். பெண்களுக்காக இப்போது நான் தனிப்பட்ட முறையில் குரல் கொடுத்துட்டு வர்றேன். இனிமே டீமா சேர்ந்து குரல் கொடுக்க போறோம். மகளிர் அமைப்பெல்லாம் பீப் சாங்கிற்காக குரல் கொடுத்தாங்க. சிம்பு அதை பண்ணிட்டாரு, இதை பண்ணிட்டாருன்னு சொன்னாங்க. ஆனா குழந்தைங்களை கற்பழிக்கிறவங்களுக்கு எதிரா ஒருத்தராவது குரல் கொடுத்தாங்களா? அவங்களெல்லாம் எங்க போனாங்க. குழந்தைகள் கற்பழிக்கப்பட்டதற்காக போராடுவோம். அவனுங்களுக்கு தூக்கு தண்டனை வாங்கிக்கொடுப்போம்னு போராடுனாங்களா. மகளிர் அமைப்புல ஒரு பொம்பளையாவது சொன்னாங்களா. அப்படின்னா என்ன மகளிர் அமைப்பு நடத்துறீங்க. இந்த மாதிரி ஆளுங்களுக்கு குரல் கொடுக்கிறதுக்காகத்தான் நாங்க கலாச்சார பாதுகாப்பு அமைப்பு தொடங்குறோம். இன்னும் ஒரு மாசத்துல தொடங்கிடுவோம்.


அதன்மூலமாக பெண்களுக்கு எந்தவித பிரச்சினைகள் இருந்தாலும் ப்ரீ கவுன்சிலிங். பெண்களுக்கு தவறுகள் நடந்தா எங்க சைடுல இருந்து கேஷ் எடுத்து நடத்துவோம். சட்ட உதவி செய்வோம். அதற்கும் நிறுவனர் நான்தான் என்கிறார் சமையல் மந்திரம் திவ்யா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in