பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சரித்திர வெற்றியை பதிவு செய்த பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது திரையிடுவதற்கு தயாராகி வருகின்றது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா, நாசர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த பாகுபலி எனும் வரலாற்று திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்புடன் வெற்றி வாகை சூடியது. பாகுபலி வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்து உருவாக்கியிருக்கும் பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் VFX பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாகுபலி-2 படத்தின் டிரைலர் மார்ச் 15ல் மும்பையில் வெளியிடப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. பலமுறை பாகுபலி படத்தின் திரையிடும் தேதி மாற்றப்பட்டு, பின்னர் டிரைலர் வெளியிட்ட ஒரு மாதத்தில் பாகுபலி வெளிவந்தது. இதே போல் இல்லாமல் பாகுபலி-2 படத்தின் டிரைலர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அறிவித்தபடி வரும் ஏப்ரல் 28ல் இப்படம் திரைக்கு வரும் என்று ரசிகர்களிடம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.