காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் |
சமீபகாலமாக படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும்போதே அந்த படங்களின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை செல்போனில் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு விடுவது சர்வசாதாரணமாகி விட்டது. இதனால் படப்பிடிப்பு தளங்களில் பலத்த செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 61வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையை அடுத்துள்ள பனையூரில் தொடங்கியது. தனது படங்களில் முதல்நாள் படப்பிடிப்பை பாடலில் இருந்து தொடங்கும் செண்டிமென்ட் கொண்ட அட்லி, ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து கொடுத்து ஒரு ஓப்பனிங் பாடலோடு படப்பிடிப்பை தொடங்கினார்.
மேலும், அந்த பாடல் காட்சியில் அப்பா விஜய் இடம்பெற்றதால், ஊர் மக்களும் அந்த பாடலில் கலந்து கொண்டு நடித்திருக்கிறார்கள். அதற்காக ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை நடிக்க வைத்தபோது அதில் சிலர் யாருக்கும் தெரியாமல் அங்கு ஒலித்த பாடலை செல்போனில் பதிவு செய்தார்களாம். இந்த தகவல் அட்லிக்கு தெரிந்ததை அடுத்து, அனைத்து ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளையும் வெளியேற்றிவிட்டு, பாடல் ஒலிக்கும் காட்சிகளை விஜய் மற்றும் முக்கிய நடிகர் நடிகைகளை வைத்து படமாக்கியிருக்கிறார். குரூப்பில் வருபவர்களை பாடல் இல்லாமலேயே வேறு விதமாக படமாக்கி முடித்திருக்கிறார்.
விஜய்-அட்லியின் இந்த அதிரடி நடவடிக்கையினால் இணையதளத்தில் வெளியான இருந்த விஜய்யின் ஓப்பனிங் பாடல் தப்பியிருக்கிறது. மேலும், படப்பிடிப்பு முடியும்வரை யாரும் ஸ்பாட்டிற்குள் செல்போன் எடுத்து வரக்கூடாது என்று அதிரடி கண்டிசனை போட்டுள்ளார் அட்லி.