மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
பாகுபலி நாயகன் பிரபாஸ் அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகளை நிறைவு செய்துவிட்டார். மூன்று, நான்கு ஆண்டுகளை பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்காக செலவிட்ட பிரபாஸ் பிற படங்களில் நடிக்க தற்போது தயாராகி வருகின்றார். ரன் ராஜா ரன் பட புகழ் இயக்குனர் சுஜீத் இயக்கவிருக்கும் கமர்ஷியல் படத்தில் பிரபாஸ் போலீஸாக நடிக்கவுள்ளார். பாகுபலி-2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தவுடன் சுஜீத் தனது படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை துவங்கிவிட்டார். கத்தி படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் சுஜீத்-பிரபாஸ் படத்தில் முதன்மை வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரபல ஹிந்தி நடிகர் விவேக் ஓபுராய் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகின்றது. தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனால் மூன்று மொழிகளுக்கும் பரிச்சையமான நடிகர்களை சுஜீத் தேர்வு செய்து வருகின்றார். அந்த வகையில் ஏற்கனவே சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள விவேக் தற்போது அஜித்தின் விவேகம் படத்தில் நடித்து வருகின்றார். விரைவில் பிரபாஸ்-சுஜீத் பட தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.