ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை: பிரபல பின்னணி பாடகி சுசித்ரா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டரிலிருந்து திரைப்பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்களும், வீடியோக்களும் வௌியாகின. மேலும் இன்னும் பலரது லீலைகள் வௌியாகும் என்று தெரிவித்திருந்தார். இது திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் சுசித்ராவோ தனது டுவிட்டர் ஹேக் செய்யப்பட்டதாக கூறினார்.
இந்நிலையில் சுசித்ரா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் ரசூல்மைதீன், நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ‛‛நடிகை சுசித்ரா கார்த்திக், தன்னுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
நடிகர், நடிகைக்குள் இருக்கும் சண்டையை சமூக வலைதளம் மூலம், இளைஞர்களை வக்கிர எண்ணத்தை தூண்டும் வகையில் புகைப்படம், வீடியோகளை பதிவு செய்வது கண்டிக்க தக்க செயலாகும்.
நடிகர், நடிகைகளை சமூக வலைதளங்களில் பின்பற்றக்கூடிய ரசிகர்கள், இளைஞர்கள் இருப்பார்கள். நடிகர், நடிகைகளின் சேட்டைத்தனத்தால், இளைஞர்கள் வழி தவற வாய்ப்பாக அமைந்துவிடும். ஆகவே காவல் துறை ஆணையர், சுசித்ரா கார்த்திக் மீது சட்டநீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.