ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்ரல் 2ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 5 அணிகள் போட்டியிடுகிறது. இதனால் தேர்தல் பரபரப்பாக நடக்கும் என்று தெரிகிறது. 5 அணியினரும் தற்போது ஓட்டு வேட்டையில் இறங்கி உள்ளனர். தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் அதிகாரியும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான எஸ்.ராஜேஷ்வரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:
தேர்தலை முதலில் உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடத்துவதாக இருந்தோம். அந்த இடவசதி போதாது என்று கருதியதால் தற்போது அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி வளாகத்தில் நடத்துகிறோம். வேட்பாளர் இறுதி பட்டிலை வெளியிடப்பட்டு விட்டது. வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு 1212 பேர் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக கண்டறியப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் தயாராகிவிட்டது. தேர்தல் அதிகாரியான எனது கையப்பமிட்ட அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.
தேர்தல் பணிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும் பாதுபாப்பிற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதால் வன்முறை எதுவும் நடக்க வாய்ப்பில்லை. வாக்குப்பதிவு வளாகத்திற்குள் வாக்காளர்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.