மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா தனது டுவிட்டரில் சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அவர்களை விமர்சித்து வருகிறார். தான் தாக்கப்படதாவும், பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் தெரிவித்து வந்தார். தற்போது அந்த படங்களை நான் பதிவிடவில்லை என் டுவிட்டர் அக்கவுண்டை யாரோ தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறிவருகிறார். இந்த நிலையில் சுசித்ராவின் கணவரும், நடிகருமான கார்த்திக் செல்பி வீடியோவில் பேசி வெளியிட்டடிருப்பது வருமாறு:
சுசித்ரா டுவிட்டரில் குறிப்பிட்ட நடிகர்கள், நடிகைகள் என்னோடு பேசினார்கள். ஏன் இப்படி நடிக்கிறது என்று கேட்டார்கள். அவர்களுக்கு சமாதானம் சொன்னேன். அவர்களும் இந்த சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டு எனது பதில்களுக்கு மதிப்பளித்தார்கள். சுசித்ரா எமோல்சனாக உள்ளார். அவரை சரிபண்ண குடும்ப உறுப்பினர்கள் முயற்சித்து வருகிறோம். சுசித்ராவுக்கு தனிப்பட்ட யார் மீதும் விரோதம் இல்லை. மீடியாக்கள் இதனை பெரிசு படுத்த வேண்டாம். சுசித்ரா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள எல்லாமே உண்மையாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இவ்வாறு கார்த்திக் கூறியிருக்கிறார்.