ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் ராதாரவி சமீபத்தில் தி.மு.கவில் இணைந்தார். தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் பேசிய ராதாரவி மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்தார். இது மாற்றுத் திறனாளிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையட்டி ராதாரவியின் பேச்சை கண்டித்து மாற்றுத் திறனானிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தேனாம்பேட்டையில் உள்ள ராதாரவி வீட்டு முன் மாற்றுத் திறனானிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதன் பிறகு ஊர்வலமாகச் சென்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ராதாரவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஒரு அரசயில் கருத்தை வலியுறுத்தவே அப்படி பேசினான்.மற்றபடி மாற்றுத் திறனாகளை அவமானப்படுத்த வேண்டும், கிண்டல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எதுவும் இல்லை. எனது பேச்சு யார் மனதையாவது வேதனைப்படுத்தியிருந்தால் அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ராதாரவி கூறியுள்ளார்.