ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் நடித்ததை விட பிறமொழி நடிகைகள் நடித்ததுதான் அதிகம். குறிப்பாக மலையாளம், இந்தி நடிகைகள். தமிழ் சினிமாவுக்கு பாலிவுட்டிலிருந்து வந்த முதல் நடிகை சாந்தா ஆப்தே. 1930ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி இந்தி மற்றும் மராட்டிய படங்களில் நடித்து வந்த இவர் 1941ம் ஆண்டு தமிழில் வெளிவந்த சாவித்ரி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அழைத்து வந்தவர் இயக்குனர் ஒய்.வி.ராவ்.
இப்போதும் மும்பையிலிருந்து வரும் நடிகைகள் தமிழில் வசனம் பேசுவது இல்லை சாந்தா ஆப்தே தமிழைக் கற்றக் கொண்டு பேசியும், பாடியும் நடித்தார். இதற்காக ஒரு ஆண்டு ஒதுக்கி தமிழ் கற்ற பிறகே நடித்தார். சாவித்திரி படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமிதான் நடிக்க வேண்டியது இருந்தது. அவர் நடிக்க மறுத்ததால் மும்மையிலிருந்து சாந்தா ஆப்தே அழைத்து வரப்பட்டார். இந்தியில் முதல் வெள்ளிவிழா படமான அமர்ஜோதி சாந்தா ஆப்தே நடித்ததுதான். சாந்தா ஆப்தே சாவித்திரி படத்திற்கு பிறகு ஏனோ தொடர்ந்து தமிழில் நடிக்கவில்லை.