மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நடிகர் கமல் ரசிகர் மன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களுடன் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்தினார் . ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது . இதற்காக பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
எதற்காக கமல், வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் என கோலிவுட்டில் பல்வேறு விதமாக செய்திகள் பரவியது. இது குறித்து கமலின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், கமல் ரசிகர் மன்ற வழக்கறிஞர்கள் சந்திப்பு வழக்கமான சந்திப்பு தான். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கமல் ரசிகர் மன்றத்தில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று காலை 11 மணி முதல் கமலை சந்தித்து வருகின்றனர். இந்த சந்திப்பிற்கு அரசியல் சாயம் எதுவும் இல்லை என்றனர். மேலும் கைது செய்யப்பட்ட ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் திங்கள் அன்று விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.