ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோழிக்கூவுது படத்திற்கு இசையமைத்தவர் ஈ.எஸ்.ராம். அதையடுத்து ஒரு கனவு போல என்ற படத்திற்கு இசையமைத்துள்ளர். இம்மாதம் திரைக்கு வரும் அப்படத்தில் சிம்பொனி ஸ்டைலில் பின்னணி இசையமைத்திருப்பதாக சொல்கிறார் அவர்.
அதுகுறித்து ஈ.எஸ்.ராம் மேலும் கூறுகையில், ஒரு கனவு போல படம் நாகர்கோயில் கதைக்களத்தில் நட்பு, குடும்பம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகியிருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு இந்த படம் ரொம்பப்பிடிக்கும். பெண்களை போற்றும் கதையில் இந்த படம் தயாராகியிருக்கிறது. இந்த படத்தில் பெண்களை போற்றும் ஒரு பாடலும் உள்ளது. அந்த பாடலை புலவர் புலமைப்பித்தன் எழுதியிருக்கிறார். வானென்றும் மண்ணென்றும் பேதமில்லை, எங்கெங்கிலும் பெண் வடிவம். எல்லாவற்றிலும் பெண்தான் முதன்மை என்கிற வகையில் இந்த பாடலின் சூழல் அமைந்துள்ளது. வி.சி.விஜயசங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் கோரிப்பாளையம் உள்பட பல படங்களில் நடித்துள்ள ராமகிருஷ்ணன், அவருக்கு இணையான இன்னொரு ஹீரோவாக செளந்தரராஜன் நடித்துள்ளனர். ஹீரோயினி அமலா ரோஸ் என்ற கேரள பெண் நடித்துள்ளார்.
இந்த படத்தில் இசைக்கு நல்ல ஸ்கோப் உள்ளது. காதல் பாடல் எதுவும் கிடை யாது. நட்புக்கான பாடல் உள்ளது. காதல்தேசம், உதிரிப்பூக்கள் வரிசையில் இந்த படம் இடம்பெறும். மணமக்களை வாழ்த்தும் ஒரு பாடல் இந்த படத்தில் உள்ளது. கடவுள் சேர்த்து வச்ச ஜோடிதானுங்க, கடலலை ஓயும்வரை வாழ வாழ்த்துங்க என்று சினேகன் எழுதிய அந்த பாடல் மக்கள் மனதில் காலத்துக்கும் நிற்கும் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி நான்கே நாட்களில் 43 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
முக்கியமாக 2 பாடல்களை ராகம் அடிப்படையில் பண்ணியிருக்கிறேன். இதில் பெண்மையை போற்றும் பாடலை பந்துவராளி ராகத்தில் கம்போஸ் செய்திருக்கிறேன். ஆடியோ விழாவில் அதைக்கேட்டு நிறைய பேர் கண்கலங்கியிருக்கிறார்கள். இதே ராகத்தில் இளையராஜா நான் கடவுள் படத்தில் ஓம் சிவஹோம் -என்ற பாடலை பண்ணியிருந்தார். இந்த பாடலை புலமைப்பித்தன் எழுத சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். புலமைப்பித்தன் எழுதிய இந்த பச்சைக் கிளிக்கொரு செவ்வந்தி பூவை தொட்டிலில் கட்டி வைத்தேன் -என்ற பாடலை நான் குழந்தையாக இருந்தபோது எங்க அப்பா தாலாட்டு பாடலாக பாடுவாராம். அந்த பர்டலை எழுதிய புலமைப்பித்தன் சார் இப்போது என் படத்துக்கு பாடல் எழுதியிருப்பது பெருமையாக உள்ளது. ஏதோ சாதித்தது போன்ற பீல் ஏற்படுகிறது.
மேலும், இந்த ஒரு கனவு போல படத்தில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ளது. இசை இல்லாத பிரேமே இருக்காது. இசையில் கதை சொல்ல வேண் டிய சூழல். டயலாக் கம்மியாக இருக்கும். 25 நாள் பின்னணி இசைக்கு எடுத்தேன். நன்றாக யோசிச்சு யோசிச்சு பண்ணினேன். நேட்டிவிட்டி படம் எ ன்பதால் மாடர்னாக சிம்பொனி ஸ்டைலில் பின்னணி இசையமைத்துள்ளேன். சிம்பொனி இசை வடிவம் என்பதால் வயலின் அதிகமாக பயன்படுத்தியிருக்கிறேன்.
அது படத்திற்கு புது கலரை காட்டியிருக்கிறது. 30 வயலின் சேர்த்து வாசித்தால் ஸ்ட்ரிங்ஸ். பின்னணி இசை அப்படி மாடர்ன் பண்ணியதால் பண்ணியதால் படத்துக்கு புதிய டோன் வந்துள்ளது. அனைவருமே பின்னணி இசையை பாராட்டினர். அதனால் இந்த ஒரு கனவு போல படம் திரைக்கு வந்தபிறகு தமிழ் சினிமாவில் எனக்கு நல்லதொரு இசையமைப்பாளர் என்கிற அங்கீகாரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் இசைய மைப்பாளர் ஈ.எஸ்.ராம்.