ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சஞ்சய் தத். சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கும் சஞ்சய் தத், முதலாவதாக ‛பூமி' என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஆக்ரா அருகே நடக்கிறது. இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பின் போது அங்கு பாதுகாப்பு நின்றிருந்த சஞ்சய் தத்தின் பாதுகாவலர்கள், செய்தியாளர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதோடு, அவர்களின் கேமராக்களையும் பிடுங்கி வைத்தனர். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்காக சஞ்சய் தத் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த சஞ்சய் தத், ‛‛சம்பவம் நடந்த இடத்தில் தான் இல்லை, ஒருவேளை அங்கு இருந்திருந்தால் பிரச்சனையை சரிசெய்திருப்பேன். இது யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
பூமி படத்தில் சஞ்சய் தத் உடன் அதிதி ராவ் நடிக்கிறார். ஓமங் குமார் இயக்குகிறார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 4-ம் தேதி ரிலீஸாகிறது.