ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஜி.வி.பிரகாஷ், கீர்த்தி கர்பெண்டா நடித்துள்ள புரூஸ்லீ படம் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி அவர் அளித்த பேட்டி வருமாறு: தன்னை புரூஸ்லீ ரேன்ஞ்சுக்கு நினைத்துக் கொள்ளும் ஒரு இளைஞனின் கதை. நான் நடித்துள்ள பிளாக் ஹியூமர் வகை காமெடி படம். கதை சீரியசாகத்தான் இருக்கும், ஆனால் ரசிகர்கள் சிரிப்பார்கள். ஒரே மாதிரியான காமெடி படங்களில் நடித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். இனி நான் சீரியஸ் படங்களில் நடிக்க இருக்கிறேன். பாலா, வெற்றிமாறன், சசி படங்கள் என்னை அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்துச் செல்லும்.
பெரிய இயக்குனர்கள் என்னை நடிக்க அழைப்பது ஏன் என்று தெரியாது. அது அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அவர்கள் மனதில் உள்ள கேரக்டருக்கு நான் பொருத்தமானவனாக இருக்கலாம். அதனால் என்னை தேர்வு செய்திருக்கலாம். நான் யாரிடமும் வாய்ப்பு கேட்கவில்லை.
பாலா சார், "என் படத்தில் நீ நடிக்கிற" என்றார். ஓகே சார்னு சொல்லிட்டேன். அவ்வளவுதான். படத்தின் கதையை பாலா சொல்ல மாட்டார் என்பார்கள். என்னிடம் முழு கதையையும் சொல்லி இருக்கிறார். நான் ஜோதிகாவின் தம்பியாக நடிக்கிறேன் என்பதில் உண்மையில்லை. எனது கேரக்டர் பற்றியும் கதை பற்றியும் எதுவும் சொல்ல இயலாது. த்ரில்லர் கதை என்பதை மட்டுமே சொல்ல முடியும். இவ்வாறு ஜி.வி.பிரகாஷ் கூறினார்.