ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பின்னணிப் பாடகியான சுசித்ரா அவருடைய டிவிட்டர் வலை தளத்தில் கடந்த பத்து நாட்களாக வெளியிட்டு வந்த கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தின. அதிலும் நேற்றிரவு முதல் அந்தக் கணக்கில் இருந்து வெளிவந்த ஒவ்வொரு விஷயமும் திரையுலகத்தை அதிரச் செய்யும் விஷயங்களாக இருந்தன. தன்னுடைய கணக்கு மீண்டும் 'ஹேக்' செய்யப்பட்டுவிட்டதாக சுசித்ரா இன்று காலை தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய பதிவுகள், புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கிவிட்டார்.
இதனிடையே, திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் சுசித்ராவைத் தொடர்பு கொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அனைத்து மீடியாக்களிலும் இந்த விவகாரம் பரபரப்பான செய்தியாக வெளிவர ஆரம்பித்தது. சுசித்ரா பகிர்ந்த பல கருத்துக்களில் தனுஷ், அனிருத், செல்வராகவன், ஆன்ட்ரியா, த்ரிஷா, டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி, ஹன்சிகா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் பற்றிய பல தகவல்கள் இருந்ததால் சம்பந்தப்பட்டவர்கள் கடும் அதிருப்திக்கு ஆளனதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய டிவிட்டர் கணக்கை எக்காரணம் கொண்டும் நீக்க மாட்டேன் என்று கூறிவந்த சுசித்ரா சற்று முன்னர் அந்தக் கணக்கை நீக்கி விட்டுள்ளார். அவராகவே அவருடைய டிவிட்டர் கணக்கை முடக்கினாரா அல்லது நிர்ப்பந்தத்தால் முடக்கப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது.
'ஹேக்' செய்யப்பட்டதாகச் சொல்லப்பட்ட கணக்கில், நேற்றைய பதிவு ஒன்றில் தன்னை நடிகரும், இசையமைப்பாளரும் மயங்கி விழும் அளவிற்கு எதையோ கலந்து கொடுத்து தன்னை பலவந்தப்படுத்தியதாக பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் சுசித்ரா, எங்கே பல உண்மைகளை வெளியிட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவருக்கு மிரட்டல் விடுத்து டிவிட்டர் கணக்கை முடக்கியிருக்கலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.
உண்மை நிலை என்ன என்பதை சுசித்ரா வெட்ட வெளிச்சமாக தெரியப்படுத்த வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது.