ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நந்திதா நடித்த முதல் படமான அட்டகத்தி அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் அதன்பிறகு அவர் மீண்டும் அட்டகத்தி தினேசுடன் உள்குத்து படத்தில் கமிட்டானபோது பெருத்த சந்தோசமடைந்தார். முதல் படத்தைப்போலவே தினேசுடன் நடிக்கும் இந்த படமும் செண்டிமென்டாக தனக்கு ஹிட்டாக அமையும் என்ற உற்சாகத்துடன் அந்த படத்தில் நடித்து வந்தார் நந்திதா. ஆனால் அப்படி அவர் பெரிய எதிர்பார்ப்புடன் நடித்த அப்படம் பல மாதங்களாக திரைக்கு வரமுடியாமல் கிடப்பில் கிடக்கிறது.
அதனால் அதன்பிறகு நந்திதாவுக்கு மெயின் ஹீரோயினாக நடிக்கும் படங்கள் கிடைக்கவில்லை. செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் மனைவியாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பவர், தற்போது அரவிந்த்சாமியின் வணங்காமுடி படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்தில் சிம்ரன், ரித்திகாசிங் ஆகியோருக்கு முக்கியமான வேடங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாம். நந்திதாவை மூன்றாவது நாயகி ரேஞ்சுக்கு பின்தள்ளி விட்டார்களாம். அதன்காரணமாக, பெரிய நடிகரின் படம் என்று எத்தனை ஹீரோயினி என்றுகூட கேட்காமல் கமிட்டாகி, கேரக்டர் நடிகையாகி விட்டேனே என்று அப்படக்குழுவினரிடம் புலம்பிக்கொண்டிருக்கிறார் நந்திதா.
அதேசமயம், நடித்து வரும் இந்த படங்கள் திரைக்கு வருவதற்கு முன்பாக ஏதாவது புதிய படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி தனது ஹீரோயின் இமேஜை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று திரைக்குப்பின்னால் சில மேனே ஜர்கள் மூலம் படவேட்டையை தீவிரப்படுத்தியிருக்கிறார் அட்டகத்தி நந்திதா.