ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கர்நாடகாவில் தமிழ்ப்படங்கள் நேரடியாகவோ அல்லது டப்பிங் செய்யப்பட்டோ ரிலீஸாகி செமத்தியாக கல்லா கட்டிவந்தன. இதனால் கன்னடப்படங்களின் வசூல் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து நீண்ட நாட்களாக டப்பிங் படங்கள் கர்நாடகாவில் திரையிடப்பட கூடாது என தடைவிதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை சில தினங்களுக்கு முன்னர் விலகியது. தடையை விளக்கி முதல் படமாக கெளதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடித்த, ‛என்னை அறிந்தால்' படம், சத்யதேவ் ஐபிஎஸ்., என்ற பெயரில் டப்பாகி ரிலீஸாகி இருக்கிறது.
கர்நாடகாவில் அநேக இடங்களில் இப்படம் ரிலீஸாகியிருந்தாலும் பெங்களூவில் மட்டும் ரிலீஸாகவில்லை. போதிய தியேட்டர் கிடைக்காததால் படம் ரிலீஸாகவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தை திரையிட்டால் அந்த தியேட்டரை தீயிட்டு கொளுத்துவேன், இதற்காக சிறை செல்லவும் தயாராக உள்ளேன் என கன்னட நடிகரும், அரசியல் பிரமுகருமான ஜக்கேஷ் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பு தெரிவித்து வருகிற மார்ச் 11-ம் தேதி போராட்டம் ஒன்றும் நடைபெற இருக்கிறது.