ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் வெளிவந்த சு...சு... சுதி வாத்மீகம் படத்தில் அறிமுமானவர் ஸ்வாதி நாராயணன். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். சுதி வாத்மீகம் படத்தில் ஷிவதா நாயர்தான் ஹீரோயின். இவர் இரண்டாவது நாயகி. அதன் பிறகு நடித்த படங்களிலும் இரண்டாவது நாயகி, ஹீரோயின் தோழி கேரக்டர்களில் நடித்தார். தற்போது தமிழில் ஹீரோயின் ஆகிவிட்டார். புதுமுக இயக்குனர் பினிஷ் ராஜ் இயக்கும் இலை என்ற படத்தன் மூலம் ஹீரோயின் ஆகிறார். இது திண்டுக்கல் அருகே 1991ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தயாராகும் படம். தமிழில் நடிப்பது பற்றி ஸ்வாதி நாராயணன் கூறியதாவது:
மலையாள பெண்களின் கனவே தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிப்பதுதான். அந்த கனவு நிறைவேறியிருக்கிறது. பெண்களை பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்ற கட்டுப்பாடு கொண்ட ஒரு கிராமத்திலிருந்து ஒரு பெண் தடைகளை தாண்டி படிப்பில் சாதனை படைக்கிற கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் ஒப்புக் கொண்டேன். எனது கேடக்டரின் பெயர் இலை. கிராமத்து பெண் என்பதால் மேக் அப் போடாமல் வெயிலில் நின்று நிறத்தை கருப்பாக்கி நடித்திருக்கிறேன். இலை படம் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு பாதையை அமைத்து தரும் என்று நம்புகிறேன். என்கிறார் ஸ்வாதி நாராயணன்.