ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோலிவுட் ஹீரோக்கள் ஆந்திராவிலும் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களின் படங்களை தெலுங்கில் டப் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் தெலுங்கு ஹீரோக்களும் தங்களுடைய படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கின்றனராம்.
ராணா டக்குபட்டியோ ஒருபடி மேலே போய் நேரடி தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். 'ஆரம்பம்' படத்தில் அஜித்துடன் முக்கிய வேடமொன்றில் நடித்த ராணா டகுபட்டி, 'பாகுபலி' படத்தின் தமிழ் டப்பிங் மூலம் தமிழக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இப்போது 'பாகுபலி' 2ஆம் பாகமும் தமிழில் வெளியாக உள்ளது.
அதற்கு முன்னதாக அவர் நடித்திருக்கும் இன்னொரு படமான 'காஸி' தமிழிலும் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அடுத்து 'மடை திறந்து' என்ற நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் ராணா. 'கழுகு' படத்திற்குப் பிறகு சத்ய சிவா எழுதிய 'மடை திறந்து' படத்தின் கதை ராணாவிற்குப் பிடித்துப்போகவே அப்படத்தில் நடிப்பதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே ஒப்புக்கொண்டார் ராணா.
'பாகுபலி -2' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல்போனதால் மடை திறந்து படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது 'மடை திறந்து' படத்தின் படப்பிடிப்பில் விரைவில் ராணா கலந்து கொள்ளவிருக்கிறார். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் இந்த வரலாற்று படத்தை 'கே புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 'மடை திறந்து' படத்தில் ரெஜினா கெஸன்ட்ரா நாயகியாக நடிக்க, நாசர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.